பட்ஜெட் சுவாரஸ்யங்கள்... வரலாற்றில் இடம் பிடித்த நிர்மலா சீதாராமன்!

 
நிர்மலா சீதாராமன்
 

இதுவரையிலான மத்திய பட்ஜெட்டில் நிகழ்ந்திருக்கும் சுவாரஸ்ய தகவல்களை இந்த பதிவில் ஒரு சின்ன ரீவைண்ட் செய்து பார்க்கலாம் வாங்க. மத்திய பட்ஜெட் வரலாற்றில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம்பிடித்துள்ளார். இதற்கு முன்பாக அவர் பட்ஜெட்டில் செய்திருந்த சாதனையை பின் மீண்டும் ஒருமுறை அவரே தகர்த்து புதிய சாதனையைப் படைத்துள்ளார். எந்த விஷயத்தில் தெரியுமா? வாங்க பார்க்கலாம்...
மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்ததை தொடர்ந்து மோடி தலைமையிலான அரசு, தனது முழு பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்ய உள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு முதல் மத்திய நிதியமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஏழாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
பட்ஜெட்டில் வரவிருக்கும் 2024-25 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கைகள் மற்றும் வரி திட்டங்கள் தாக்கல் செய்யப்படும். இந்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற காரணத்தால் கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது.

நிர்மலா சீதாராமன்


மத்திய பட்ஜெட்டின் வரலாற்று சிறப்புகள்:


இந்தியாவின் முதல் பட்ஜெட்: கடந்த 1860ம் ஆண்டு, ஏப்ரல் 7ஆம் தேதி, கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த ஸ்காட்லாந்து பொருளாதார வல்லுநரும் அரசியல்வாதியுமான ஜேம்ஸ் வில்சன் இந்தியாவில் பட்ஜெட்டை முதல்முறையாக அறிமுகம் செய்தார்.
1947ம் ஆண்டு, நவம்பர் 26ம் தேதி, அப்போதைய மத்திய நிதியமைச்சர் ஆர். கே. சண்முகம் செட்டியால் சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
நீண்ட பட்ஜெட் உரை: 
கடந்த 2020ம் ஆண்டு, பிப்ரவரி 1ம் தேதி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2020-21 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கிட்டத்தட்ட 2 மணி நேரம் 42 நிமிடங்கள் பட்ஜெட் உரையை அவர் வாசித்தார். இதுவே, வரலாற்றில் நீண்ட நேரம் ஆற்றப்பட்ட பட்ஜெட் உரையாகும்.பட்ஜெட் உரையில் இரண்டு பக்கங்கள் மீதம் இருந்த போதிலும், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பட்ஜெட் உரையை குறைக்க வேண்டியதாயிற்று. உரையில் எஞ்சிய பகுதியை படித்ததாக கருதுமாறு சபாநாயகரிடம் அவர் கேட்டுக் கொண்டார்.முன்னதாக, 2019ம் ஆண்டு, ஜூலை மாதம், மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் ஆற்றிய முதல் பட்ஜெட் உரைதான் நீண்ட நேரம் ஆற்றப்பட்ட உரையாக இருந்தது. தன்னுடைய சாதனையை அவரே முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

நிர்மலா சீதாராமன்
அதிக சொற்கள் கொண்ட பட்ஜெட் உரை: 1991ம் ஆண்டு, நரசிம்மராவ் அரசாங்கத்தில் நிதியமைச்சராக பொறுப்பு வகித்த மன்மோகன் சிங் தான் சொற்களின் அடிப்படையில் மிக நீண்ட பட்ஜெட் உரையை ஆற்றினார். அந்த பட்ஜெட்டில், 18,650 சொற்கள் இடம் பெற்றிருந்தது.
2018ம் ஆண்டில், அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் 18,604 சொற்கள் கொண்ட பட்ஜெட், சொற்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இரண்டாவது மிக நீண்ட பட்ஜெட் ஆகும். அதை வாசிக்க, ஜெட்லி 1 மணி நேரம் 49 நிமிடங்கள் எடுத்து கொண்டார்.
மிக குறுகிய பட்ஜெட் உரை: 1977ம் ஆண்டு, நிதியமைச்சர் ஹிருபாய் முல்ஜிபாய் படேல் வழங்கிய பட்ஜெட்தான் இந்தியாவின் மிக குறுகிய பட்ஜெட் ஆகும். அந்த பட்ஜெட் உரையில், 800 சொற்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தது.
அதிக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர்கள்: முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய், நாட்டின் வரலாற்றிலேயே அதிக பட்ஜெட்களை தாக்கல் செய்தவர் என்ற சாதனையை படைத்தார்.1962ம் ஆண்டு முதல் 69ம் ஆண்டு வரையில், நிதியமைச்சராக பொறுப்பு வகித்த போது 10 பட்ஜெட்டுகளை அவர் தாக்கல் செய்தார், அதைத் தொடர்ந்து ப. சிதம்பரம் (9), பிரணாப் முகர்ஜி (8), யஷ்வந்த் சின்ஹா ​​(8), நிர்மலா சீதாராமன் (7), மன்மோகன் சிங் (6) ஆகியோர் அதிக பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த நிதியமைச்சர்கள்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web