இன்னைக்கே மாத்திடுங்க.. கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது!!
இந்தியாவில் தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ2000 நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கு இன்றே கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 80சதவீதம் நோட்டுகள் திரும்ப பெறப்பட்ட நிலையில் இந்த ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கான காலஅவகாசம் நீடிக்கப்படவில்லை.இந்தியா முழுவதும் மே மாதம் ரூ2000 நோட்டுகள் திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
மே 23 முதல் ரூ2000 நோட்டுகளை திரும்பப் பெறுதல் தொடங்கியது. இன்று செப்டம்பர் 30 வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இந்நிலையில், 2,000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருப்பவர்கள் வங்கியில் கொடுத்து மற்றும் கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.
2,000 நோட்டு மாற்றும் அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், 2 நாட்களுக்கு முன்பிருந்தே பெட்ரோல் பங்க்குகள், ஆன்லைன் கேஷ் ஆன் டெலிவரி பேருந்துகள், மால்களில் ரூ2000 நோட்டுக்கள் வாங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, 2000 ரூபாய் நோட்டுகள் பெட்ரோல் பங்குகளில் வாங்கப்பட மாட்டாது எனவும் ரூ 2000 நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றுங்கள் எனவும் பெட்ரோல் பங்குகள் சங்கம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...