காஞ்சிபுரம், செங்கல்பட்டு , ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது!

 
students

வங்கக்கடலில் உருவாகி தீவிரமடைந்துள்ள மோந்தா புயல் காரணமாக சென்னையில் நேற்று முதல் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, இந்த புயல் இன்று மாலை ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கவுள்ளதாகவும், மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை

புயல் தாக்கத்தால் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டு மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

பள்ளி கல்லூரி விடுமுறை மாணவிகள் மழை

இதற்கிடையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் வானிலை சாதாரணமாக இருப்பதால் அங்குள்ள பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இன்று (28.10.2025) செயல்படும் என்று அந்தந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!