இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை... மின்விநியோகம் சீரான பகுதிகளின் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர்!

 
தங்கம் தென்னரசு இபி மின்சாரம்

நேற்று ஒரே நாளில் சென்னையை புரட்டி போட்டு கடந்திருக்கிறது மிக்ஜாக் புயல். இன்னும் புயல் பாதிப்புகளில் இருந்து மக்கள் முழுமையாக வெளிவரவில்லை. பல பகுதிகளில் குடியிருப்புகள் வெள்ள நீரில் முழ்கியுள்ளன. நேற்று முன் தினம் இரவு மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்ட நிலையில், மக்களின் தேவைகளைச் சொல்லவும் செல்போன் சிக்னல்களும் கிடைக்கவில்லை. வெளிச்சமும் இல்லாமல் மழையில் கடும் அவதிக்குள்ளானார்கள்.  மீடியாக்களின் டிஆர்பி ரேட்டிங் உபயத்தில், சென்னையைத் தவிர்த்து வெளியூர்களில் வசிக்கும் உறவினர்களுக்கு சென்னை முழுவதுமே ஜலசமாதி அடைந்து விட்டதைப் போல வெள்ள நீர் பகுதிகளின் வீடியோக்களை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி, மொத்த சென்னை மக்களின் நிலையாக உறவினர்களைப் பதற செய்தனர்.

மிக்ஜாம் புயல் தாக்கம், மழை வெள்ளம் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களின் பாதுகாப்பு கருதி மின்தடை செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மழை வெள்ளம் வடியத் தொடங்கியுள்ள நிலையில் படிப்படியாக மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில், மின்சார விநியோகம் சீரான பகுதிகளின் விவரங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.


இதுகுறித்து தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை  அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் வலைதளப் பக்கத்தில், சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மேற்கு மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட ஜெ.ஜெ. நகர், சாந்தி காலனி, அண்ணா நகர், சேத்துப்பட்டு, எஸ்ஏஎப் கேம்ஸ் வில்லேஜ், ஸ்பார்ட்டன் நகர், கலெக்டர் நகர், குமரன் நகர், மூர்த்தி நகர், சர்ச் சாலை, அடையாளம்பட்டு, எஸ் & பி பொன்னியம்மன் நகர், சென்னை மத்திய மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட அண்ணா சாலை, கிரிம்ஸ் ரோடு, நுங்கம்பாக்கம், ஸ்பென்சர் பிளாசா, பூக்கடை, சிந்தாதிரிப்பேட்டை, லஸ், ராயப்பேட்டை, மேற்கு மாம்பலம், தலைமைச் செயலகம் ஆகிய பகுதிகள்.

மிக்ஜாம் புயல் மழையால் குடியிருப்பை சூழ்ந்த வெள்ளம்.

சென்னை வடக்கு மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட சிஎம்பிடி, ஐசிஎப், இந்தியா பிஸ்டன், கீழ்பாக்கம், மணலி, நியூகொளத்தூர், பேப்பர்மில்ஸ் ரோடு, பெரியார் நகர் ஆகிய பகுதிகள் சென்னை தெற்கு - I மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட ஆழ்வார் திருநகரின் ஒரு பகுதி, கிண்டி, ராமாபுரம், ராமசாமி சாலை, செயின்ட் தாமஸ் மவுண்ட், வடபழனி, கெருகம்பாக்கம், போரூர் ஒரு பகுதி மற்றும் சென்னை தெற்கு - II மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட பெசன்ட் நகர், அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர், தொட்டியம்பாக்கம், கடப்பேரி ஆகியவற்றின் ஒரு பகுதி என பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web