தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் ... சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

 
மீனவர்கள்
 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததன்படி,  நாளை  24ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல்வேறு இடங்களில் கனமழை தொடரும் வாய்ப்பு உள்ளது.

மழை

இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட், மேலும் சென்னை உள்பட 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மழை

அதே நேரத்தில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நேற்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இதன் பேரில், புதுச்சேரியில் இன்று அதி கனமழை, காரைக்காலில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என புதுச்சேரி மீன்வளத்துறை அறிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!