நிறைமாத கர்ப்பிணி பிளேடால் அறுத்து கொலை செய்த கணவன் !! கதறித் துடித்த பெற்றோர்!!

 
ஷோபா

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் சாமலாப்பூர் உண்டி கிராமத்தில் வசித்து வருபவர்  ஷோபா .   இவரது கணவர் மஞ்சுநாத் . இருவரும்  கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு  காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரே மகன்.    ஷோபா 2வது முறையாக கர்ப்பம் தரித்து  நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். மஞ்சுநாத், ஷோபாவிடம் அவரது பெற்றோரிடம் வரதட்சணை வாங்கி வரும்படி கூறி அடிக்கடி தகராறு செய்ய ஆரம்பித்தார்.  அவர் வரதட்சணை வாங்கி வர மறுத்து வந்துள்ளார். 

பரபரப்பு! விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸ்! நிறைமாத கர்ப்பிணி உட்பட 3 பேர் பலி!


பிரசவத்திற்காக கடந்த மாதம் முதல் ஷோபா சாமலாப்பூரில் உள்ள தாய் வீட்டில் தங்கியிருந்தார்.  அங்கு வந்த மஞ்சுநாத், பெற்றோரிடம் வரதட்சணையாக பணம் வாங்கி வரும்படி கூறி தொல்லை கொடுத்துள்ளார்.  இதை ஷோபா மறுத்ததும் ஆத்திரமடைந்த மஞ்சுநாத், தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் கர்ப்பிணி என்றும் பாராமல் மனைவி ஷோபாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் அவர் அலறி துடித்தார். உடனே அங்கிருந்து மஞ்சுநாத் தப்பி ஓடிவிட்டார். 

 

பாகிஸ்தான் ஆம்புலன்ஸ்
 ஷோபாவின் பெற்றோர்கள் பதறித்துடித்து அவரை மீட்டு  அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மைசூரு கே.ஆர். அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல்  பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்து மஞ்சுநாத்தை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வரதட்சணை வாங்கி வர மறுத்த கர்ப்பிணியை காதல் கணவரே பிளேடால் கழுத்தை அறுத்துக்கொலை செய்த  சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web