பீகார் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட ஓவைசி திட்டம்!
பீகாரில் வரும் நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட ஓவைசி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி, பீகாரில் இந்தியா கூட்டணியில் இணைந்து போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆர்.ஜே.டி. கட்சிக்கு 3 முறை கடிதம் எழுதிய போதிலும், அவர்களிடமிருந்து பதில் வரவில்லை என்று கூறினார்.

இந்நிலையில், பீகாரில் ‘சீமாஞ்சல் நியாய யாத்திரை’ என்ற பெயரில் 3 நாள் பிரசாரத்தை ஒவைசி நேற்று தொடங்கினார். இதனால் ஒவைசி தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2020 பீகார் தேர்தலில், ஒவைசி கட்சி 25 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி பெற்றது. ஒவைசி கட்சியை சேர்த்தால், வரும் தேர்தலை இந்து – முஸ்லிம்கள் இடையிலான போட்டியாக பாஜக மாற்றிவிட வாய்ப்பு உள்ளதால், கூட்டணியில் சேர்க்க எங்களுக்கு தயக்கம் இருப்பதாக இந்தியா கூட்டணி கட்சியினர் தெரிவித்தனர்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
