பகீர்... காவல் நிலையம் முன்பு இளம்பெண் தீக்குளிப்பு!!

 
ஜெயசுதா

திருப்பூர் மாவட்டம் பல்லகவுண்டன்பாளையத்தில் வசித்து வருபவர்   மாரிமுத்து . இவருடைய மகள் ஜெயசுதா. இவருக்கு வயது 24. இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து  வருகிறார். நேற்று மாலை கோபி போலீஸ் நிலையம் சென்ற ஜெயசுதா, வாணிப்புத்தூரில் வசித்து வரும் வசந்த் தன்னை காதலித்து ஏமாற்றியதாகவும், அவர் மீது உடனடியாக  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க புகார் அளித்தார்.போலீசார் இது குறித்து மேலும் சில தகவல்களை கேட்டறிந்தனர்.  

தீக்குளிப்பு
அப்போது ஜெயசுதா, வசந்த் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி  கடந்த ஆண்டிலேயேசத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் அந்த வழக்கின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.  அதனால் தற்போது கோபி போலீஸ் நிலையத்திற்கு வந்துள்ளதாக ஜெயசுதா விளக்கம் அளித்துள்ளார்.  இச்சம்பவம் குறித்து அங்கிருந்த போலீசார் ஏற்கனவே ஒரு இடத்தில்புகார் அளிக்கப்பட்டுள்ளது.  ஒரே சம்பவத்தை மற்றொரு வழக்காக பதிவு செய்ய இயலாது' என எடுத்துக் கூறினர்.    இதனால் மன வருத்தமும் , ஏமாற்றமும் அடைந்த ஜெயசுதா, அதனை ஏற்க மறுத்து,  தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனிலிருந்து   பெட்ரோலை உடல் மீது ஊற்றி தீயை பற்ற வைத்துக் கொண்டார்.  

ஆம்புலன்ஸ்


உடனே அங்கிருந்த போலீஸார் ஓடி வந்து தடுத்து நிறுத்தி, அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினார்கள். இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.   இது குறித்து ஜெயசுதா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web