திருவண்ணாமலையில் பஞ்சரதத் தேரோட்டம்... விண்ணைப்பிளந்த அரோகரா கோஷம்....!!

 
திருவண்ணாமலை

 திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில்  திருக்கார்த்திகை தீபத்திருவிழா  ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. 17 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படும் தீபத்திருவிழாவை காண உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வது திருவண்ணாமலையில் முகாமிட்டுள்ளனர். நவம்பர் 17ம் தேதி   கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவின் சிகர நிகழ்ச்சி மலை மீது தீபம் ஏற்றுதல் இந்தநிகழ்வு நவம்பர் 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் அதிகாலை  திருக்கோவில் கருவறையின் முன்பு அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு திருக்கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்படவுள்ளது.

திருவண்ணாமலை
இந்நிலையில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் பஞ்ச ரதங்களின் தேரோட்டம் இன்று நடைபெற்றது. முதலில் விநாயகர் தேரை பக்தர்கள் மாட வீதிகளில் இழுத்து சென்றனர். 2வது வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் தேரோட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.  7ம் நாளான இன்று பஞ்சரத தேரோட்டத்தில்  வெள்ளி ரதத்தில்  உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளந்தது.

கார்த்திகை தீபத்திருவிழாவில் கடந்த ஆண்டு 25 லட்சம் பக்தர்கள் பங்கேற்றனர். இந்த ஆண்டு சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து எப்போதும் இல்லாத அளவில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதையொட்டி, தீபத்திருவிழாவுக்காக மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகளை, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் இன்று நேரடி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம், மகாதீபம் தரிசன ஏற்பாடுகள் பாதுகாப்பு குறித்து இன்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 30 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்தார்கள். இந்த ஆண்டு கூடுதலாக 25 சதவிகிதம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், போக்குவரத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் கூடுதலாக செய்யப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை

பரணி தீபம் மற்றும் கார்த்திகை தீபம் பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை கோவிலில் தற்போது முழு நேர அன்னதானம் நடைபெறுகிறது. இங்கு காலை மற்றும் மாலை நேரத்தில் டிபன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் சாத்தியக்கூறுகள் இருந்தால் கண்டிப்பாக அன்னதானம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்படும்.

கார்த்திகை தீபத்தின் போது விஐபி பாஸ் தரிசனம் முறை அமலில் இல்லை. கட்டளைதாரர் உபயதாரர் பணியாளர்களுக்கு மட்டும் அனுமதி உள்ளது. கடந்த ஆண்டு பரணி தீபத்தில் 4,000 பக்தர்களும் மகா தீபத்தின் போது 7,500 பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு கூடுதலாக அனுமதிப்பது குறித்த ஆலோசனை செய்யப்படுகிறது. திருவண்ணாமலையில் தனியார் தங்கும் விடுதிகளில் கட்டணத்தை உயர்த்த கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

From around the web