சசிகலா இளவரசிக்கு பிடிவாரண்ட்!! பரபரக்கும் அரசியல் களம்!!
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு கடுங்காவல் தண்டணை விதிக்கப்பட்டது. இவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிலையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
அப்போது சிறையில் சொகுசு வசதிகளைப் பெறுவதற்காக ரூ2 கோடி லஞ்சம் கொடுத்ததாக இவர்கள் மீது புகார் எழுந்தது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்த வழக்கு கர்நாடகா லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கின் விசாரணையில் சசிகலா, இளவரசி தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிபதி 2 பேருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளார். அவர்கள் இருவரையும் அக்டோபர் 5ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!