ப்ளீஸ்... இனி இப்படி செய்யாதீங்க... பெருந்துயரம்... பேருந்தில் தொங்கியப்படி பயணித்து தவறி விழுந்த மாணவனின் கால்கள் அகற்றம்!

 
சந்தோஷ் பஸ் படிக்கட்டு

சமீபத்தில், அரசு பேருந்தில் பள்ளி, கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த மாணவர்கள், பேருந்தினுள் செல்லாமல், படிகளில் தொங்கியப்படியும், பேருந்தின் கூரையில் ஏறியப்படியும் பயணித்ததை நடிகை கண்டித்தது பெரும் சர்ச்சையானது. பேருந்தின் ஓட்டுநர், நடத்துநரையும் கண்டித்திருந்தார். உங்கள் மகனாக இருந்தால், இப்படி தான் எதுவும் சொல்லாமல் பேருந்தை இயக்குவீர்களா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி, அரசு ஊழியரை  பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு பதிவு செய்திருந்தார்கள்.

இந்த சம்பவம் நடந்து முழுதாக ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதே வழிதடத்தில் அரசுப் பேருந்தில் படிகளில் தொங்கியபடி பயணித்த மாணவன் சந்தோஷ், தவறி விழுந்த நிலையில், பேருந்தின் சக்கரம் மாணவனின் கால்கள் மீது ஏறி நசுக்கியதில், கால்கள் முழுவதுமாக அகற்றப்பட்டன.

படிக்கட்டில் பயணம்

சென்னையை அடுத்த காஞ்சிபுரம், குன்றத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வரும் சந்தோஷ், நேற்று மாலை பள்ளி முடிந்தது சக மாணவர்களுடன் அரசுப் பேருந்தில் பயணித்தார். அப்போது, சந்தோஷ் பேருந்தின் முன்பக்க படியில் தொங்கியபடி பயணித்ததாக தெரிகிறது. பேருந்து குன்றத்தூர் தேரடி பகுதியை கடந்தபோது எதிர்பாராத விதமாக மாணவன் சந்தோஷ், பேருந்தின் படியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

இதையடுத்து பேருந்தின் பின்பக்க சக்கரம் சந்தோஷின் கால்கள் மீது ஏறியது. இதில் சந்தோஷின் இரண்டு கால்களும் நசுங்கின. தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள், நேற்று இரவு அறுவை சிகிச்சை செய்தனர். அதில் மாணவனின் 2 கால்களும் அகற்றப்பட்டன.

தற்போது முதற்கட்ட அறுவை சிகிச்சை மட்டுமே நடைபெற்றுள்ளதாகவும், மூட்டுப்பகுதியில் ஏற்பட்டுள்ள காயங்களுக்கு மற்றொரு அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்தில் பயணம் செய்து மாணவன் கால்களை இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து படியில் நின்று பயணம் செய்யாதீர்கள் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்படும் நிலையில், அதனை கேட்காததால் மாணவர்கள், இவ்வாறு துயரத்தை எதிர்கொள்ளும் நிலை ஏற்படுகிறது.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web