செல்போனில் அரட்டை... தந்தை கண்டித்ததால் பிளஸ் 1 மாணவி தற்கொலை!

 
செல்போனில் அரட்டை

இரவு நேரங்களில் செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்ததை தந்தை கண்டித்ததால் பிளஸ் 1 படித்து வந்த மாணவி , தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை கோயம்பேடு முனியப்பா நகரைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம். டாட்டா ஏஸ் வாகனம் ஓட்டி வரும் இவருக்கு இந்துஜா (16) என்ற மகளும், சரண் (12) என்ற மகனும் இருந்தனர். மோகன சுந்தரத்தின் மனைவி பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் காலமான நிலையில், குழந்தைகள் இருவரும் தந்தையின் அரவணைப்பில் வளர்ந்து வந்தனர்.

செல்போனில் அரட்டை
மகள் இந்துஜா ஜெ ஜெ நகரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்1 படித்து வந்தார். இந்நிலையில், நேற்றிரவு மாணவி இந்துஜா நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததை பார்த்து தந்தை மோகனசுந்தரம் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி படுக்கை அறைக்கு சென்று புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தற்கொலை
இரவு வெளியே சென்று வண்டி ஓட்டி விட்டு, வீட்டிற்கு திரும்பிய மோகனசுந்தரம் படுக்கை அறைக்கு சென்று பார்த்த போது மகள் இந்துஜா தூக்கில் பிணமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கோயம்பேடு போலீசாருக்கு தகவல் அளித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மாணவி இந்துஜாவின்  உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web