பாமக விசிக கட்சியினர் மோதல்... இளைஞர் மண்டை உடைப்பு... டாக்டர் ராமதாஸ் வீட்டருகே பரபரப்பு!

 
விசிக பாமக மோதல்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் - செஞ்சி சாலையில் நேற்று அங்காளம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழா ஊர்வலம் திண்டிவனம் நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கொண்டிருந்த போது, விசிக., பாமக கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. இருகட்சியினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு கோஷம் எழுப்பியதால் அந்த பகுதியே பரபரப்புக்குள்ளானது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

நேற்று சிவராத்திரி விழா முடிந்ததையடுத்து, விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில்  மயானக்கொள்ளை திருவிழா களைக்கட்டியது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் காளி வேடமணிந்து மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மயான கொள்ளை திருவிழாவிற்கு ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். இவர்களது ஊர்வலம் திண்டிவனம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வீட்டிருகே சென்ற போது, விசிகவினர் கோஷம் எழுப்பியதால் அந்த இடத்தில் சர்ச்சை கிளம்பியது. 

மேல்மலையனூர் அம்மன்

மருத்துவர் ராமதாஸ் இல்லம் இருக்கும் இடத்தின் வழியே ஊர்வலம் சென்று கொண்டிருந்த போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள், விசிக கொடி கட்டிய வேல் கொண்டு அந்த பகுதியில் நடனம் ஆடிக் கொண்டிருந்ததால், அவர்கள் விசிக கொடி கட்டிக் கொண்டு நடனமாடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 

மேல்மலையனூர் அங்காளம்மன்

திடீரென இரு கட்சியினரும் மோதிக் கொண்டதால், அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று இரு தரப்பினரிடையேயும் பேச்சுவார்த்தை நடத்தினர். இருதரப்பினரும் கலைந்து செல்லாமல், போலீசாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திண்டிவனம் உட்கோட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன், இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினார். அப்போதும் இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட முயன்றதால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.

போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்ததும், அங்கிருந்து தப்பியோடிய இளைஞர்களில் சிலர், போலீசார் மீது கற்களை வீசி தாக்கினார்கள். இந்த தாக்குதலில் மரக்காணத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் தலையில் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web