கவிஞர் தமிழ் ஒளிக்கு தஞ்சையில் சிலை!! முதல்வர் அதிரடி!!

 
தமிழ் ஒளி

கவிஞர் தமிழ்ஒளி செப்டம்பர் 29, 1924ம் ஆண்டு குறிஞ்சிப்பாடியில்  அடுத்த ஆடூர்   கிராமத்தில் பிறந்தார். தமிழ் ஒளியின் இயற்பெயர் விஜயரங்கம்.  இவர் பாரதியாரின் வழித்தோன்றலாகவும், பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கி கவிதைகளைப் படைத்தவர். கவிதைகள் மட்டுமல்லாது கதைகள், கட்டுரைகள், இலக்கியத் திறனாய்வுகள், மேடை நாடகங்கள், குழந்தைப் பாடல்களை எழுதியவர்.  

தஞ்சை பல்கலைக்கழகம்


தாழ்த்தப்பட்ட மக்களின் இழிநிலை கண்டு,  இழைக்கப்படும் கொடுமைகளை சமூகத்தில் நிலவும் சாதிய வேறுபாடுகளையும் சாடி கவிதைகள் எழுதியவர். தமிழ்ஒளியின் கவிதைகள் தனித்தன்மை வாய்ந்தவை. தொடக்கக் காலத்தில் திராவிடர் கழகத்தைச் சார்ந்தவராக இருந்த போதிலும் பொதுவுடைமைக் கொள்கைகளையும்  உயிர் மூச்சு எனக்  கொண்டிருந்தார்.
 இடதுசாரி சிந்தனையால் தமது படைப்பாக்கங்களில் கவிஞர் தமிழ்ஒளி சாதியத்தையும் விளிம்புநிலை மக்களின் விடுதலையையும் பாடியுள்ளார்.  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் உறுப்பினராகவும் இருந்து வந்தார்.

ஸ்டாலின்

இந்நிலையில் கவிஞர் தமிழ்ஒளி  நூற்றாண்டினை முன்னிட்டு கவிஞர் தமிழ்ஒளிக்கு தஞ்சாவூரிலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மார்பளவு சிலை அமைக்கப்படும். பள்ளி மாணவர்களிடையே  தமிழ் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில் ரூ50 லட்சம்  வங்கியில் வைப்புத் தொகை செலுத்தப்படும். இதிலிருந்து , கிடைக்கப்பெறும் வட்டித் தொகையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் தமிழ் சார்ந்த போட்டிகள் நடத்தி கவிஞர் தமிழ்ஒளி பெயரில் பரிசுகள் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web