செஸ் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா!! குவியும் வாழ்த்துக்கள்!!
10-வது உலகக் கோப்பை செஸ் போட்டிகள் அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் நடைபெற்று வருகிறது. இதில் அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியாவின் தமிழக கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா கலந்து கொண்டுள்ளார். இவர் உலகின் 3-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பேபியானா காருவானாவுடன் விளையாடினார். இந்த அரைஇறுதி சுற்று இரு ஆட்டங்களும் டிராவில் முடிவடைந்தது. அதிவேகமாக காய்களை நகர்த்தும் டைபிரேக்கரில் இருவரும் 4 ஆட்டங்களில் மோத வேண்டும். இதன்படி முதல் 2 ஆட்டம் டிரா ஆனது. 3வது ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் சாதுர்யமாக விளையாடி வெற்றி பெற்றார்.
அடுத்த ஆட்டம் டிராவில் முடிந்தது. முடிவில் பிரக்ஞானந்தா 3½-2½ என்ற புள்ளி கணக்கில் பேபியானாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார். சென்னையைச் சேர்ந்த 18 வயதான பிரக்ஞானந்தா இந்த வெற்றியின் மூலம் அடுத்த ஆண்டு டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் கேன்டிடேட் செஸ் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டிக்கு தகுதி பெற்ற 3வது இளம் வீரர் ஆவார். கேன்டிடேட் போட்டியில் வெற்றி பெறும் வீரர் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் விளையாடும் வாய்ப்பை பெறுவார் . பிரக்ஞானந்தா அடுத்து இறுதி ஆட்டத்தில் 'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனுடன் இன்று விளையாட இருக்கிறார். இந்த ஆட்டமும் 2 ஆட்டங்களை கொண்டது. இது சமன் ஆனால் டைபிரேக்கருக்கு நகரக்கூடும்.
'இந்த தொடரில் கார்ல்செனுடன் மோதுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் இறுதிப்போட்டியில் மட்டுமே அவரை சந்திக்கும் வாய்ப்பு இருந்தது. இறுதிசுற்று வரை வந்து கார்ல்சென்னுக்கு எதிராக விளையாடுவேன் என நினைக்கவில்லை. எனது சிறப்பான ஆட்டத்தை கார்ல்செனுக்கு எதிராக வெளிப்படுத்துவேன். கேன்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு தகுதி பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது . பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் , செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த், பயிற்சியாளர் ரமேஷ், இந்திய செஸ் சம்மேளன தலைவர் சஞ்சய் கபூர் உட்பட பலரும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!