இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த கர்ப்பிணி.. போராடி குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள்!

 
குழந்தை

அக்டோபர் 7, 2023 முதல், காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது, காசா இஸ்ரேலைத் தாக்கி வருகிறது. அதன்பின்னர், இருதரப்பு தாக்குதலில் 39,006 காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதேபோல், 1,139 இஸ்ரேலியர்கள் பரிதாபமாக இறந்தனர்.இருதரப்பும் நடத்தும் இந்த தொடர் தாக்குதல்களில், பலியானவர்களில் பெரும்பாலானோர் அப்பாவி மக்களும் குழந்தைகளும் என்பது மிகப்பெரிய சோகம்.

இஸ்ரேல்-ஹமாஸ்

யுனிசெஃப் கூட, “காசா குழந்தைகளுக்கான கல்லறையாக மட்டுமல்ல, சர்வதேச சட்டத்தின் கல்லறையாகவும் மாறிவிட்டது. இதனால் போர் முழு சர்வதேச ஒழுங்கின் மீது ஒரு அவமானகரமான கறையாக மாறியுள்ளது. அங்கு நடப்பது போர்க்குற்றம்,'' என்றார். இந்நிலையில், பல உயிர்களை பலி வாங்கிய இந்த போர்க்களத்தில் புதிய உயிர் ஒன்று உதயமாகியுள்ளது. இது பலரை மகிழ்ச்சி மற்றும் சோகத்திற்கு ஆளாக்கியுள்ளது.

அதன்படி பாலஸ்தீனம் அருகே உள்ள நுசிரத் அகதிகள் முகாமில் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த ஓலா அட்னான் ஹர்ப் என்ற கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருந்த ஆண் குழந்தையை காஸா மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்த மருத்துவர்கள் குழந்தைக்கு தொடர் சிகிச்சை அளித்துள்ளனர்.

குழந்தை உயிரிழப்பு

தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தை நலமாக இருப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், தாயின் மரணம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, காசா மீதான இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட மொத்தம் 24 பேர் உயிரிழந்தனர்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web