மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி... பிப்ரவரி18ல் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பு!

 
மோடி

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்கபதற்காக பிப்ரவரி 18-ம் தேதி  மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி. கடந்த சில வாரங்களிலேயே நான்கு முறை தமிழகத்திற்கு வந்துள்ள பிரதமர் மோடி, தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்பதற்காக மீண்டும் பிப்ரவரி 18ம் தேதி வருகிறார். மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் குறிப்பிட்டத்தக்க தொகுதிகளில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது.

பிரதமர் மோடி

இதற்காக பல்வேறு பணிகளையும் தமிழகத்தில் மேற்கொண்டு வருகிறது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி தமிழகத்திற்கு வருகிறார் என்று கூறப்படுகிறது.கடந்த சில மாதங்களாக நடந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறும் என் மண், என் மக்கள் பாதயாத்திரை பிப்.18-ம் தேதி பல்லடத்தில் நிறைவு பெறுகிறது. இந்த நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.. 

அண்ணாமலை
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் 18-ம் தேதி நடைபெறும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரை பிரம்மாண்ட நிறைவு விழாவில் அவர் பங்கேற்கிறார். அதை பாஜகவின் தேர்தல் பிரச்சாரத் தொடக்க விழாவாக நடத்தவும் பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டத்திற்குப் பின்னர் அவர் கட்சி முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்து தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசனையிலும் ஈடுபட உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web