மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.... தனியார் பள்ளி முதல்வர் கைது!

 
கார்த்திகேயன்

பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. பள்ளிகள் தொடங்கி பணியிடங்கள், உறவினர்கள் , நண்பர்கள் என இம்மாதிரியான சம்பவங்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில்  விக்கிரவாண்டி  ரெட்டணை கிராமத்தில்   தனியார் சிபிஎஸ்சி பள்ளி ஒன்று செயல்பட்டு  வருகிறது. கார்த்திகேயன் என்பவர்  பள்ளி முதல்வராக இருந்து   வருகிறார். அப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவருக்கு கார்த்திகேயன் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

சிறுமி பாலியல் வன்கொடுமை!! 15 வயது சிறுவன் பகீர் வாக்குமூலம்!!

இது குறித்து   அந்த மாணவி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே கூறியுள்ளார். இதன் பேரில்  பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஜனவரி 16ம் தேதி  பாலியல் புகார் அளித்தனர். ஏற்கனவே பள்ளியில் படித்து வரும் மற்றொரு  மாணவியும் பள்ளியின் முதல்வர் கார்த்திகேயன் மீது பாலியல் குற்றச்சாட்டுப் புகார் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர   விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.  

போக்சோ நீதிமன்றம்

அந்த விசாரணையில்   கார்த்திகேயன் மாணவிகளிடம் அத்துமீறி நடந்தது    உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கார்த்திகேயன் மீது   போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டதில் அவர்   தலைமறைவானார்.போலீசார்  அவரை வலைவீசித் தேடி வந்த நிலையில்   இன்று காலையில் அவர்  கைது செய்யப்பட்டார்.    அவரிடம்  பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணைக்குப் பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என காவல் துறை சார்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

அடக்கொடுமையே.. 112 வயசுல 8 வது கல்யாணம்..... மணமகனை வலைவீசி தேடும் பாட்டி... !

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க!

From around the web