சிறுமி கொலை... சிறையில் கைதி தற்கொலை முயற்சி!

 
ஆர்த்தி


புதுச்சேரியில் சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான விவேகானந்தன், சிறைச்சாலைக்குள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த 5ம் வகுப்பு படித்து வந்த சிறுமி, கடந்த 2ம் தேதி கடத்தப்பட்ட நிலையில், கடந்த 5ம் தேதி சோலை நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.

ஆர்த்தி


போலீசார் விசாரணையில், அதே பகுதியைச் சோந்த விவேகானந்தன் (56), கருணாஸ் (19) ஆகியோா் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்தனர். சிறையில், பிற கைதிகளால் இவர்கள் இருவரும் தாக்குதலுக்குள்ளாக நேரிடும் என்பதால் இருவரையும் தனியறையில், சிறையில் அடைத்தனர்.

ஆர்த்தி

இந்நிலையில், இன்று விவேகானந்தன் தனது சட்டையை வைத்து கழுத்தை இறுக்கி தற்கொலை முயற்சி செய்ததாக கருணாஸ் அலறியடித்து வார்டனிடம் தெரிவித்தார். 
சிறை வார்டன் ஓடி வந்து விவேகானந்தனை காப்பாற்றி, தற்கொலை முயற்சி செய்யக்கூடாது என்று எச்சரித்தார். இருவரையும் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரி, முத்தியால்பேட்டை போலீசார் இன்று நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய உள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web