அதிர்ச்சி... கல்லூரி அலுவலகத்தில் 8 வயது மகளை கொலை செய்து பேராசிரியர் தற்கொலை!
ஹரியானா மாநிலத்தில் லாலா லஜ்பத் ராய் கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்தவர் சந்தீப் கோயல் (35).
இந்நிலையில், பேராசிரியர் சந்தீப்பும், அவரது 8 வயது மகளும் கல்லூரி அலுவலகத்தில் கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக கிடந்தனர். இது குறித்து பேராசிரியர் சந்தீப் மனைவி போலீசாரிடம், "எனது கணவர் சந்தீப் கோயல், மகளை ஸ்கூட்டரில் அழைத்துச் செல்வதாகக் கூறி மாலை 4 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றார். பல மணிநேரமாகியும், கணவரும் மகளும் வீட்டிற்கு வராததால், அவர்களைத் தேடி பல்கலைக்கழகத்திற்கு வந்தேன்.
#WATCH | Haryana: A scientist in Hisar allegedly died by suicide after slitting his 8-year-old daughter's throat and killing her, on 10th March. Police investigation is underway. pic.twitter.com/BnweB3YKCg
— ANI (@ANI) March 11, 2024
கல்லூரியில் அவரது துறைக்கு வெளியே ஸ்கூட்டர் நின்றிருந்ததால், அவர்கள் இருவரும் அறைக்குள் இருப்பார்கள் என நினைத்து அறைக்கதவைத் திறக்க முயன்ற போது, அறையின் கதவு உள்பக்கமாகப் பூட்டி இருந்தது. உடனடியான அங்கிருந்த பாதுகாப்பு அழைத்து, கதவைத் திறந்து பார்த்த போது, என் கணவரும் மகளும் ரத்த வெள்ளத்தில் கழுத்தறுக்கப்பட்டு இறந்து கிடந்தனர்" எனத் தெரிவித்தார்
.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் காவல்துறை அதிகாரி, சந்தீப் கோயல் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்திருப்பதாகவும், அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் கத்தியால், சந்தீப், தனது 8 வயது மகளின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, அதே கத்தியால் தானும் கழுத்தை அறுத்துக் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார். இருவரது உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!