திருச்செந்தூரில் புரட்டாசி பெளர்ணமி வழிபாடு... ஆயிரக்கணக்கான குவிந்த பக்தர்கள்!

 
திருச்செந்தூர்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் நேற்று புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவு முழுவதும் தங்கியிருந்து அதிகாலையில் சுவாமியை தரிசனம் செய்து வழிபட்டனர். 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பெளர்ணமி தோறும் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பெளர்ணமி தினத்தன்று கோவில் கடற்கரையில் தங்கி வழிபாடு செய்துவிட்டு, மறுநாள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.

இந்நிலையில், புரட்டாசி மாத பெளர்ணமியையொட்டி நேற்று கோவில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் அவர்கள் நேற்றிரவு கடற்கரையில் தங்கி வழிபாடு செய்தனர். 

இலவச பொது தரிசனம் மற்றும் ரூ.100 சிறப்பு தரிசன பாதையில் கூடுதலாக தடுப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கோவில் வளாகத்தில் பெருந்திட்ட வளாக பணிகள் நடைபெற்று வருவதால் வாகனம் நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லை. அதனால் நகரில் தற்காலிக வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் நகர் பகுதி மற்றும் நகரின் எல்லைகளில் ஆங்காங்கே ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அதே போல் நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் வழித்தடங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை