1 முதல் 12ம் வகுப்பு வரை பொதுவினாத்தாள் முறையில் காலாண்டு தேர்வு!!

 
தேர்வு

தமிழகத்தில்  தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை தரம் உயர்த்த பல்வேறு செயல்பாடுகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. தற்போது காலாண்டு தேர்வு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகம்  முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள்கள் ஒரே நாளில் நடைபெறவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  
அந்த வகையில், நடப்பு கல்வியாண்டுக்கான நாட்காட்டியை பள்ளிக்கல்வித் துறை   ஏப்ரல்  28ல் வெளியிட்டது.

விடுமுறை

அதில் காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வுகள் செப்டம்பர் 3-வது வாரத்தில் தொடங்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி காலாண்டுத் தேர்வுக்கால அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.தமிழ்நாட்டில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான காலாண்டு தேர்வை பொதுத்தேர்வாக நடத்த பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர்களின் தேர்வு அட்டவனையும் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு

தமிழ்நாட்டில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு செப்டம்பர் 15 முதல் 27-ம் தேதி வரை நடைபெறும். 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9.30 முதல் மதியம் 12.45 மணி வரையும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 1.15 முதல் மாலை 4.30 மணி வரையும் தேர்வு நடைபெறும்.அதேபோல 6 முதல் 10-ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 19 முதல் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10 முதல் மதியம் 12.30 மணி வரையும், 9, 10-ம் வகுப்புகளுக்கு மதியம் 2 முதல் மாலை 4.30 மணி வரையும் தேர்வு நடைபெற உள்ளது.மேலும் 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான உடற்கல்வி தேர்வு செப்டம்பர் 22-ம் தேதி நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து 28 முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை வழங்கப்படும்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web