15 ஆண்டுகளுக்கு பிறகு ராகு புதன் சேர்க்கை... 3 ராசிக்காரங்களுக்கு பணமழை கொட்டப் போகுது.!

நவக்கிரகங்களில் இருக்கும் 9 பேரும் சுற்றிக் கொண்டே இருப்பதால் 12 ராசிக்காரர்களும் அதற்கேற்ற பலனை பெறுவார்கள் . இதில் ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு விதமான பலனை தரும். அதிலும் ராகு பகவான் அசுப கிரகமாக கருதப்படுகிறார். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடும். அதிலும் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடிய ராகுவால் பலருக்கும் அச்சமே. நவக்கிரகங்களில் சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக இடம் மாறக்கூடியவர் ராகு பகவான் .
இவர் ஒரு ராசியில் 18 மாதங்கள் சஞ்சாரம் செய்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதி முதல் ராகு பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். அதே போல் நவக்கிரகங்களில் இளவரசனாக திகழக் கூடியவர் புதன் . இவர் கல்வி, அறிவு, செல்வம், புத்திக்கூர்மை ஆகியவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். மிக மிக குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றிக் கொள்ளக்கூடியவர் புதன் பகவான்.
மார்ச் மாதம் புதன் பகவான் மீன ராசியில் நுழைகின்றார். இதன் காரணமாக ராகு மற்றும் புதன் சேர்க்கை நிகழ இருக்கிறது. ராகுவும் புதனும் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இணைய உள்ளனர். இதனால் 12 ராசிகளிலும் ஒரு சில மாற்றங்கள் ஏற்படலாம் என்றாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தால் திக்கு முக்காடப் போகிறது.
மிதுன ராசி
சாமர்த்தியமான மிதுன ராசிக்காரர்களே உங்கள் ராசியில் 10ம் இடத்தில் ராகு புதன் சேர்க்கை நிகழ உள்ளது. இதனால் தொழிலில் அபிவிருத்தி உருவாகும். நினைத்த காரியம் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் லாபம் பெறுவீர்கள். பணியிடத்தில் பதவி உயர்வு கிட்டும். பாராட்டுக்களை பெறலாம்.உறவினர்களால் ஆதாயம் பெருகும். இந்த காலகட்டத்தில் தொழிலில் எதிர்பாராத வெற்றியைப் பெற வாய்ப்புள்ளது. வணிகத்தில் , விரும்பிய முன்னேற்றத்தைப் பெறலாம். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. உறவினர்களால் ஆதாயம் பெருகும்.
கடக ராசி
சாதனை படைக்கப் போகும் கடக ராசிக்காரர்களே உங்கள் ராசியில் 9 வது இடத்தில் ராகு புதன் சேர்க்கை நிகழ உள்ளது. இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் பெருகும். ஆன்மீகத்தில் நாட்டம் பெருகும். இழுபறியாக இருந்த வழக்குகள் சுபமாக முடிவடையும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் தேடி வரும். புதிய முயற்சியில் வெற்றி பெறலாம். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர்களால் சலசலப்புக்கள் நீங்கும். பணம் பல வழிகளில் வந்து சேரும். சேமிப்புக்கள் உயரும்.
கும்ப ராசி
சாதிக்கும் ஆற்றல் பெற்ற கும்பராசிக்காரர்களே உங்கள் ராசியில் 2 வது வீட்டில் புதன் மற்றும் ராகு சேர்க்கை நிகழ இருக்கின்றது. இதனால் திடீர் பணவரவு கொட்டும். எதிர்பாராத நேரத்தில் வந்து அனைத்து துன்பங்களும் தீர இருக்கிறது. தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி மேன்மை பெருகும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறலாம். பொன் பொருள் ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். கடன் தொல்லைகள் தீரும். சுபகாரியம் கைகூடும். கொடுக்கல் வாங்கல் அமோகமாக இருக்கும். இழுபறியாக இருந்த பிரச்சனைகள் சுப முடிவுக்கு வரும்.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க