அதிர்ச்சி... ரூ150கோடியை சூதாட்டத்தில் தொலைத்த ரஜினியை கழுவி ஊற்றிய சினிமா விமர்சகர்!!

 
ரஜினி

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தபோதிலும் வசூல் சாதனை படைத்ததாக தயாரிப்பாளர் கலாநிதிமாறன் அறிவித்து அனைவருக்கும் பரிசுகளை வாரி வழங்கினார். ரஜினியை பொறுத்தவரை எத்தனை   உயரத்திற்கு சென்றாலும் எளிமையான வாழ்க்கையையே  வாழ்பவர். சூப்பர்ஸ்டாராக ஆன பிறகும் கூட நீண்ட நாட்கள்  தனது பழைய அம்பாசிடர் காரில் தான் வெகு காலம் வரை படப்பிடிப்புக்கு வந்து கொண்டிருந்தார். கடந்த சில வருடங்களாகத்தான்  அம்பாசிடரில் இருந்து இன்னோவா காருக்கு மாறினார்.

ரஜினி

தற்போது  'ஜெயிலர்' பட சக்சஸ் மீட்டில்  அவருக்கு விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ சொகுசு காரை கலாநிதி மாறன் பரிசாக வழங்கினார். அந்த காரில் சென்றபோதுதான் தனக்கு பணக்காரனான ஃபீல் வந்ததாக  ரஜினிகாந்த் கூறியிருந்தார்.  இது குறித்து   பிரபல சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி சமீபத்தில் ஒரு பேட்டியில் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்  " ரஜினி அம்பாசிடர் காரை தான் பயன்படுத்தி வந்தார். சில வருடங்களாக  இன்னோவா காருக்கு மாறினார்.   பிஎம்டபிள்யூ போன்று  திடீரென ஒரு லக்ஸூரியான காரில் பயணம் செய்யும் போது  பணக்காரங்களோட கார் என்ற ஃபீல் வந்தது. அவர் 'ஜெயிலர்' சக்சஸ் மீட்டில் தான் பணக்காரன் போல் உணர்வதாக கூறி இருக்கலாம். ரஜினி  செல்வந்தராக இருந்தாலும்  அவரிடம் உள்ள கோடிகளை எண்ண இரண்டு கை பத்தாது. எத்தனை கோடிகளை அடுக்கி வைத்திருந்தாலும்  மனதளவில் மிகவும் எளிமையானவராகத்தான் இருக்கிறார்.

ரஜினி

 இப்போதான் பணக்காரனாக உணர்வதாக கூறியதை ஒரு மிகைப்படுத்திய பேச்சாகவும் பார்க்க முடிகிறது. ஏனெனில் ரஜினி  உள்ளுக்குள்  பல ஆண்டுகளாக கோடீஸ்வரனாகத் தான் வாழ்ந்து வருகிறார். எளிமையான வாழ்வு என்பது மேல்பூச்சு தான்.  திடீர்னு 100 கோடி, 150 கோடி சம்பளம் வாங்கிட்டு, அந்த பணத்தையெல்லாம் எப்படிடா செலவழிப்பது என தெரியாமல் திண்டாடி வருகிறார்.  

லாஸ்வேகாஸ் கிளம்பிப்போய்  சூதாடி, இந்த சம்பாதித்த பணத்தையெல்லாம் தோத்துட்டு அப்பாடா என மனசு ரிலாக்ஸாகி வருகிற வாழ்க்கையைத் தான் ரஜினி தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிறார்.  அதைத் தெரிந்து கொள்ளும் தருணத்தில்   காருக்குள்ள உட்காரும் போதுதான் பணக்காரனா ஃபீல் பண்ணதா அர்த்தம் இல்ல.  நீங்க லாஸ்வேகாஸில் சூதாடும்போதே அது தெரிஞ்சு போச்சு" என பிஸ்மி கூறியுள்ளார். அவரது இந்த பேச்சு திரை உலகில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web