வைரல் வீடியோ... போலீசையே ஓட விட்ட போதை ஆசாமிகள்!!
பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கத்தில் திருமாவளவன் கோயில் திருவிழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அந்த பகுதியில் கஞ்சா போதையில் சுற்றித்திரிந்த இளைஞர்கள் திருமாவளவனை கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டினர்.அவர் பணம் தர மறுக்கவே கையில் இருந்த கத்தியால் அவரை அறுத்துவிட்டு அவரிடம் இருந்த பணத்தை பிடுங்கி சென்றனர். இதனால் படுகாயம் அடைந்த திருமாவளவன் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
🥹சென்னை பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
— Bagavath Pratheep (@Bagavathprathee) August 22, 2023
வழிப்பறி புகார் குறித்து விசாரிக்க வந்த போலீஸை கத்தியை காட்டி மிரட்டிய கும்பல்
“கையில் தடி இருந்தும் கஞ்சா போதை ஆசாமிகளிடம் இருந்து தப்பித்து ஓடிய போலீசார்”
நல்ல விடியல் டா🤦 #DMKFailsTN pic.twitter.com/SWbpnTTFkc
அப்போது கஞ்சா போதையில் இருந்த 3 பேரும் கையில் கத்தி உடன் போலீஸ் சரவணனை மிரட்டும் வகையில் ஓட ஓட விரட்டினர். இதனை அடுத்து சம்பவம் நடந்த இடத்திற்கு மேலும் சில போலீசார் வந்து போதை இளைஞர்களை மடக்கி பிடித்தனர்.அவர்களிடம் விசாரணை செய்த போது அவர்கள் அனைவரும் காட்டுப்பாக்கம் அடுத்த ஜெ.ஜெ.நகர் பகுதியில் வசித்து வருபவர்கள் எனக் கூறினர். இதில் ஒருவன் 18 வயது நிரம்பாத சிறுவன் என தெரிய வந்தது.
இவர்கள் மூவரும் சேர்ந்து சுற்றுவட்டாரத்தில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். போதை ஆசாமிகளை பிடிக்க சென்ற காவலரின் கையில் தடி மற்றும் துப்பாக்கி இருந்தும் இளைஞர்களை கண்டு பின்னோக்கி ஓடும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.சமீபகாலமாக அந்த பகுதிகளில் கஞ்சா போதையில் இளைஞர்கள் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதாக அப்பகுதி மக்கள் கூறிவருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!