இன்று தமிழகம் முழுவதும் ரேஷன்கார்டு குறைதீர்க்கும் முகாம்!!
தமிழகத்தில் மானிய விலையில் உணவு தானியங்கள் ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அதே போல் ஒவ்வொரு மாதமும் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல் நீக்கல், திருத்தல் முகவரி, பெயர் மாற்றம் என குறைதீர்க்கும் முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் அக்டோபர் 2023 மாதத்திற்கான மாதாந்திர மக்கள் குறைதீர் முகாம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அலுவலகங்களில் நடைபெற்று வருகின்றன.
இந்த முகாம்கள் இன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி இன்று நடைபெற உள்ள குறைதீர் முகாம்களில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உட்பட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும்.
நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற நேரில் வருகை தர இயலாதவர்களுக்கு அங்கீகாரச் சான்றும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
அது தவிர பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதனையடுத்து தங்கள் அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...