நயன்தாரா, விக்னேஷ் சிவன் மீது உறவினர்கள் புகார்... நிலத்தை அபகரித்ததாக க்ரிமினல் நடவடிக்கைக்கு வலியுறுத்தல்!

 
நயன் விக்கி

இயக்குநர் விக்னேஷ் சிவனின் தந்தையும், நடிகை நயன்தாராவின் மாமனாருமான சிவக்கொழுந்து என்பவர், தனது உறவினர்களை ஏமாற்றி, அவர்களுக்கே தெரியாமல் அவர்களது நிலத்தை அபகரித்து விட்டதாகவும்,  அவர் மீதும், நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கூறி லால்குடி டிஎஸ்பி அலுவலகத்தில், விக்னேஷ் சிவனின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து புகார் அளிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மரம் சும்மா இருந்தாலும் காற்று அதை சும்மா இருக்க விடுவதில்லை என்பதைப் போல நடிகை நயன்தாராவை சுற்றி, அவர் சிம்புவைக் காதலிக்க துவங்கியதில் இருந்தே சர்ச்சைகள் ரவுண்டு கட்டி அடித்து வருகிறது. உதட்டோடு உதடு கவ்வி வல்லவன் படத்துக்கு எடுத்த போஸ்டர் புகைப்படங்கள், சிம்புவுடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கை, பிரபுதேவாவுடனான இரண்டாவது காதல், அவரது  மனைவியுடன் சண்டை, பட புரோமோஷன்களுக்கு வராமல் தயாரிப்பாளர்களுடன் பிரச்சனை, நடிகர், தயாரிப்பாளர் உதயநிதியுடனான காதல்(?) ராதாரவியின் மேடை பேச்சால் முதல்வர் வரை பஞ்சாயத்து பேசி, அவரை திமுகவில் இருந்து நீக்க வைத்தது , விக்னேஷ் சிவனுடான காதல்... லிவிங் டூ கெதர் வாழ்க்கை... திருமணம்... வாடகை தாய் மூலமாக குழந்தைகள் என பாப்புலாரிட்டிக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் சர்ச்சைகளிலும் வலம் வருபவர் நயன்தாரா.

நயன்தாரா

இந்நிலையில், நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் மீது அவர்களது உறவினர்கள் திருச்சி மாவட்டம், லால்குடி டி.எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அதாவது, லால்குடியில் உள்ள விக்னேஷ் சிவனின் பெரியப்பா மாணிக்கம் மற்றும் கோயம்பத்தூரில் வசித்து வரும் குஞ்சிதபாதம் அவரது மனைவி சரோஜா ஆகியோர் புகார் மனு கொடுக்க வந்துள்ளனர்.

நயன்தாரா

 தனக்கு உடல்நிலை சரியில்லை. இதயத்தில் நான்கு அடைப்புகள் உள்ளன. அதற்கு சிகிச்சை பெற வேண்டும். இது குறித்து லால்குடியில் வசித்து வரும் தனது அண்ணன் மாணிக்கத்திடம் உதவி கேட்டேன். தங்களது சொத்தில் வில்லங்கம் உள்ளதால் சொத்தை விற்று கொடுக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் சொத்தை விற்க வேண்டும் என்றால் விக்னேஷ் சிவன் மற்றும் அவரது தாயார் மீனா குமாரி, சகோதரி ஐஸ்வர்யா ஆகியோர் வந்து வில்லங்கத்தை தீர்க்க வேண்டும் என லால்குடி டி.எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜூலை முழுவதுமே அதிர்ஷ்டம் தான்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web