குரங்கு போல் மாறிய மனிதன்... வதந்தியால் கண்ணீர் விட்டு கதறும் உறவினர்கள்!

 
குரங்கு

 
இன்றைய  அவசர தொழில்நுப்ட யுகத்தில் அருகில் இருப்பவர்களிடம் பேசவோ , அவர்களுக்கு உதவி செய்யவோ யாருக்கும் நேரமில்லை. அதே நேரத்தில் தொலைதூரத்தில் இருப்பவர்களுடன் ஏதேதோ பேசிக்கொண்டும், என்ன நடந்தாலும் உடனே அதை வீடியோவாக படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதும் தொடர்கதையாகி வருகிறது. ஒரு விஷயத்தை கண்ணால் கண்டால் அதன் உண்மை தன்மை குறித்து அலசியபிறகே அந்த செய்தியை பதிவிடுவது முறை. ஆனால் யாருக்கும் அதனை கேட்க பொழுதில்லை.

கண்ணால் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என நினைத்து உடனடியாக அதனை படம் பிரித்து போட்டு விடுவது. சமூக வலைதளங்களில் வைரலாக்குவது என செய்துவிடுகின்றனர். அந்தவகையில் சிலர் பொய்யான செய்திகளை பரப்பி பிரபலமாக முயற்சி செய்கின்றனர். அவ்வாறு அவர்கள் பரப்பும் வதந்திகள் சில சமயம் வைரல் ஆகிவிடுகின்றன.  அந்த வகையில் தற்போது வெளியான ஒரு வீடியோவில் தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் வசித்து வருபவர் மனநல பிரச்சனையின் காரணமாக காளையார் கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் அவர் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட போது அங்கு மருத்துவர்கள் இல்லாததால் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.


அப்போது அங்கு ஆம்புலன்ஸில் இருந்து இறங்க மறுத்த அவர் அங்குள்ள கிரில் கதவில் ஏறி குரங்கு போல் குதித்து அருகில் இருந்தவர்களை பயமுறுத்தினார். அங்கிருந்தவர்கள் தப்பி ஓடினர்.அதன் பின் பாதுகாவலர்கள் சரவணனை பிடித்து கைகளை கட்டி சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
இதனை வீடியோவாக எடுத்த ஒரு நபர் குரங்கு கடித்ததால் குரங்கு போன்று மாறினார் என வதந்தியை பரப்பினார். இது குறீத்த வீடியோவும்  இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனைக் கண்ட சரவணனின் உறவினர்கள் மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தனர். மேலும் இது போன்ற வதந்திகள் பரப்புவது சரியானது அல்ல என்பதை அனைவரும் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை