அடங்காத ரவுடி பேபியை மீண்டும் தட்டி தூக்கிய போலீசார்!!

 
ரவுடி பேபி

கொரோனா காலத்தில் அனைவருக்குமே கையில் ஒரு மொபைல். அனைவருமே ஒரு யூடியூபர் என்ற நிலை உருவாகி விட்டது. உபயோகமான என்று இல்லை எதையும், எப்படியும் போடலாம் என்ற  அலட்சிய போக்கு இன்றைய இளசுகளிடையே. இதனால் எந்த விஷயத்தையும் சர்ச்சைக்குரிய வகையில் மாற்றி அமைத்து அதனை கலாய்த்து வீடியோவாக வெளியிட்டு விடுகின்றன. இதனை கட்டுப்படுத்த தற்போது சைபர் க்ரைம்கள் சாட்டையை சுழற்ற தொடங்கிவிட்டன.

அந்த வகையில் மதுரையில் வசித்து வரும்  சூர்யா   தனது பெயரை ‘ரவுடி பேபி’ என மாற்றி டிக்டாக்கில் பிரபலம் அடைந்தார். டிக்டாக் தடை செய்யப்பட்ட பின்னர், மற்ற சமூக வலைதளங்களில் ரவுடி பேபி சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்தார். இவரது பேச்சு மற்றவர்களை முகம் சுளிக்க வைத்தது. மேலும், அவரது வீடியோக்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் சமூக வலைதளங்களில் எழுந்தது.

டிக்டாக் ரவுடி பேபி சூர்யா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது... சிக்காவும்  தப்பவில்லை | Rowdy baby Surya arrested by Goondas act - Tamil Oneindia

இதுமட்டுமல்லாது, சக யூடியூபர்களையும் தகாத வார்த்தையில் பேசி திட்டித்தீர்த்து வந்த இவர் மீது புகார் கொடுக்கப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதும் செய்யப்பட்டார்.இதனையடுத்து தற்போது கோவை யூடியூபர் சித்ராவை சூர்யா மிரட்டியதாக கூறப்படுகிறது. சில மாதங்கள் சிறையில் இருந்து வெளியே வந்து மீண்டும் தனது சேட்டையை தொடங்கிவிட்டார். 

கூப்பிடுகிறார்கள்".. இதோ இன்னும் ஒரு டிக்டாக் சீரழிவு.. கண்ணீர் விட்டு  புலம்பிய "ரவுடி பேபி" சூர்யா | the famour tik tok star rowdy baby suryas  another video - Tamil Oneindia

இந்நிலையில் சித்ரா காவல்துறையினரிடம் புகார் அளிக்கவே ’ரவுடி பேபி சூர்யாவை” சிக்கந்தரை மதுரை சைபர் க்ரைம் போலீஸார் நேற்று  கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பாக மருத்துவ சோதனைக்காக  அரசு ராஜாஜி மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டார். அங்கு   திடீரென சூர்யா   மயங்கி விழுந்தார். இதனால் பதறிய காவல்துறையினர் அவருக்கு தேவையான மருத்துவபரிசோதனைகளை 2 மணி நேரத்தில் முடித்துவிட்டு நீதிமன்றத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச்சென்று சிறையில் அடைத்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web