மாதந்தோறும் ரூ.2 கோடி குவியும் கோயிலில் அம்மன் சிலைக்கு ரேஷன் கடை புடவை; பக்தர்கள் அதிர்ச்சி!

 
அம்பாளுக்கு ரேஷன் புடவை திருவண்ணாமலை

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அம்மன் சிலையில் சாத்தப்பட்டிருந்த ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு  வழங்கப்பட்ட விலையில்லாத சேலை பக்தர்களை அதிர்ச்சியடைய செய்தது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானதால் அதன் பின்னர், சேலையை அகற்றி விட்டு, வேறு சேலை மாற்றப்பட்டது.

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி வந்து வழிபடுகின்றனர். ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த  மலையைச் சுற்றி கிரிவலம் செல்கின்றனர். 

திருவண்ணாமலை

இந்து சமய அறநிலையத் துறை மூலம் அண்ணாமலையார் கோயில் மற்றும் கிரிவல பாதையில் உள்ள கோயில்களில் உண்டியல் வைக்கப்பட்டு காணிக்கை பெறப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் ரூ.2 கோடிக்கு கொஞ்சமும் குறையாமல் அதிகளவிலேயே உண்டியல் வசூல் நடைபெற்று வருகிறது. உண்டியல் வருவாய் மட்டுமல்லாமல் கட்டண தரிசனம் மூலமாகவும் கோடிகளில் வருமானம் குவிகிறது. இது தவிர, தினசரி பூஜை, விழா காலங்களில் அண்ணாமலையார் கோயிலுக்கு பல லட்சம் ரூபாயை உபயதாரர்கள் செலவிடுகின்றனர். பிரதோஷம், பெளர்ணமி, மாத சிவராத்திரி, கிருத்திகை, திங்கள், வெள்ளி கிழமைகள் என்று விசேஷ நாட்களில் இந்த வருமானம் பலமடங்கு அதிகரிக்கும். இவ்வளவு நிதி ஆதாரம் இருந்தும், திருவண்ணாமலை உண்ணாமுலை அம்மன் சந்நிதி முன்பு உள்ள அம்பாள் சிலைக்கு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சேலை நேற்று சாத்தப்பட்டது. 

அம்பாளுக்கு ரேஷன் புடவை திருவண்ணாமலை

இதனை புகைப்படம் எடுத்த பக்தர்கள், சமூக வலைதளத்தில் வெளியிட்டு இந்து சமய அறநிலைத்துறையின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பினார்கள். ஏற்கெனவே தமிழக கோயில்களின் வருமானத்தை முறையாக இந்துசமய அறநிலையத்துறை செலவழிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த புகைப்படங்கள் உடண்டியாக வைரலானது.  அதன் பின்னர் கோயில் நிர்வாகம், அம்பாள் சிலைக்கு சாத்தப்பட்ட நியாய விலை கடையின் சேலையை அவசர அவசரமாக மாற்றி, புதிதாக மாற்று சேலையை சாத்தினர். 

இது குறித்து பக்தர்கள் கூறும்போது, “ஊர் கூடி கொள்ளையடித்தாலும் சிவன் சொத்து குல நாசம் தான். அது அதிகாரிகளோ, ஆள்பவர்களோ,  பதவியில் இருப்பவர்களோ... நியாய விலை கடையில் வழங்கப்படும் வேட்டி, சேலையை தமிழகத்தில் 90 சதவீத மக்கள் பயன்படுத்துவது கிடையாது என்பது எல்லோருக்குமே தெரியும். வேட்டி, சேலையை கடைகளில் ரூ.100-க்கு விற்பனை செய்து விடுகின்றனர். ஒவ்வொரு மாதமும் பல கோடி ரூபாயை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தும், அம்பாளுக்கு நியாய விலை கடை சேலையை உடுத்தியது கண்டனத்துக்குரியது.  இது கோயில் நிர்வாகத்தின் அலட்சியத்தையே காண்பிக்கிறது. மாதந்தோறும் அத்தனை சேலைகள் குவிகின்றன. அவையெல்லாம் என்னவானது? அம்பாளுக்குஇந்த நிலை தொடரக் கூடாது”என்றனர்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web