விபத்தில் பலியான தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் குடும்பத்திற்கு ரூ 5லட்சம் நிதியுதவி!!
நாங்குநேரி சுங்கச்சாவடியில் நடந்த சாலை விபத்தில் புதிய தலைமுறை தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கர் உயிரிழந்தார். இவருக்கு வயது 33. இவர் சந்திரயான் விண்கலம் தொடர்பான செய்திக்காக திருவனந்தபுரம் சென்று விட்டு திருநெல்வேலி திரும்பும் வழியில் உயிரிழந்தார் . இது குறித்து முதல்வர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.
அத்துடன் இந்தவிபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மூன்று நபர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க உத்தரவிடப்படுள்ளது. இளம் வயதில் உயிரிழந்த தொலைகாட்சி ஒளிப்பதிவாளர் சங்கரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் மற்றும் ஆறுதல்கள்.
அத்துடன் அவரது குடும்பத்தினருக்கு ரூ5 லட்சம் நிவாரணத் தொகையும், படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 3 நபர்களுக்கு தலா ரூ50000 நிவாரணத் தொகையும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!