பிப்ரவரி 13ம் தேதி சபரிமலை நடை திறப்பு!
![சபரிமலை](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/f6039327658679a04ac99e9a4dcbd589.png)
சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு பூஜைகள் நிறைவடைந்து ஜனவரி 21ம் தேதி நடை சாத்தப்பட்டது. ஒவ்வொரு மாதமும் மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை பிப்ரவரி 13ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில், மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறக்கப்பட உள்ளது. பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 18 வரை தொடர்ந்து 5 நாட்கள் நெய் அபிஷேகம், படிபூஜை, உதய அஸ்தமன பூஜை, சகஸ்ரகலச பூஜை, புஷ்பாபிஷேகம் உட்பட சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்படும்.
இந்த நாட்களின் சாமி தரிசனம் செய்ய விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். அங்கேயே, உடனடி முன்பதிவு முறையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.இத்தகவலை திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க