நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி... ரசிகர்கள் அதிர்ச்சி... !!

 
சமந்தா

நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதிலிருந்து குணமடைந்ததும் கோவில்களில் பிரார்த்தனைகளை நிறைவேற்றினார்.  தற்போது வெளிநாட்டில் தனது அம்மாவுடன் தங்கி தீவிர சிகிச்சை எடுத்து வருகிறார். அவ்வப்போது சமூக வலைதளங்களில் புகைப்படங்கள், ரீல்ஸ் பகிர்வது, ரசிகர்களுடன் உரையாடுவது என  தமது பொழுதை கழித்து வருகிறார்.

சமந்தா

இந்நிலையில் மீண்டும் மருத்துவமனையில் இருந்து கையில் ஸ்ட்ரிப் ஏற்றி இருக்கும் புகைப்படத்தை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.இது குறித்து வெளியிட்ட பதிவில்   ‘என்னுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த சிகிச்சையை மேற்கொண்டு வருகிறேன். இந்த சிகிச்சை மூலம் , ரத்த அணுக்கள் உற்பத்தி அதிகரிப்பு, தசை வலிமை, வைரஸ்களை எதிர்த்துப் போராடும் திறன், எலும்புகளுக்கு வலிமை போன்ற பலன்கள் கிடைக்கும்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

சமந்தா


சமந்தா விரைவில் குணமடைந்து மீண்டு வரவேண்டும் என ரசிகர்கள் அனைவரும் பிரார்த்தனை  செய்து வருகின்றனர். நடிகை சமந்தா  மயோசிடிஸ் சிகிச்சைக்காக தொடர்ந்து அதிக டோஸ் ஸ்டிராய்டு எடுத்து கொண்டதால், அவரின் தோலின் நிறம் மாறிவிட்டது. இதனை சமந்தாவே சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடியபோது தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web