புதிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயர் பரிந்துரை!

 
சஞ்சீவ் கண்ணா

 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக 2022ல் டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்றுக் கொண்டார்.  இவரது பதவி காலம் நவம்பர் 10ம் தேதி  நிறைவடைய உள்ளது. இதையடுத்து அடுத்த புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயரை சந்திரசூட் நேற்று பரிந்துரை செய்துள்ளார்.  இந்த பரிந்துரையை அரசு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், சுப்ரீம் கோர்ட்டின் 51வது நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பொறுப்பேற்றுக் கொண்டார்.

 சஞ்சீவ் கண்ணா, கடந்த 14 ஆண்டுகள் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணிபுரிந்தவர். 2019ம் ஆண்டு உச்சநீதிமன்ற  நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நவம்பர் 10ம் தேதி உச்சநீதிமன்ற  நீதிபதியாக பொறுப்பேற்று இப்பதவியில் 2025ம் ஆண்டு மே மாதம் வரை இருப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 51 வது நீதிபதியாக பொறுப்பேற்க்க இருக்கும் சஞ்சீவ் கண்ணா   6 மாதங்கள் தலைமை நீதிபதியாக பொறுப்பை வகிப்பார். 1960ல்  டெல்லியில் பிறந்த சஞ்சீவ் கண்னா, டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர். இவரது தந்தை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதியாக 1985 வரை பதவி வகித்தார். இவரது தாயார் சரோஜ் கண்ணா.  1983ல்  டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்ட சஞ்சீவ் கண்ணா மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார்.  

வருமான வரித்துறையின் மூத்த வழக்கறிஞராக நீண்ட காலம் பணிபுரிந்து  உள்ளார். 2004ம் ஆண்டு டெல்லி அரசின் வழக்கறிஞராக  நியமிக்கப்பட்டார். டெல்லி ஐகோர்ட்டில் பல்வேறு கிரிமினல் வழக்குகளில் ஆஜரானவார். 2005ல்  டெல்லி ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாக  சஞ்சீவ் கண்ணா நியமிக்கப்பட்டார். 2019ல்  சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். எந்த ஒரு நீதிமன்றத்திலும் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிக்காமல், சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார் . இதற்கு முன்பாக ஒரு சில நீதிபதிகளே பரிந்துரையின் பேரில் இப்படி பொறுப்பை வகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!