ஆகஸ்ட் 26 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!! முதல்வர் அதிரடி அறிவிப்பு!!
இந்தியாவின் வட பகுதிகளில் பல மாநிலங்களில் மேகவெடிப்பு காரணமாக பெருமழை கொட்டி வருகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான முக்கிய சாலைகள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் சண்டிகர், பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.
இதனால் அங்குள்ள பக்ரா, பாங்க் அணைகள் நிரம்பி வழிந்தன. அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் காரணமாக குர்தாஸ்பூர், ஹோஷியாபூர், கபூர்தலா, பெரோஸ்பூர் மாவட்டங்களில் பல பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சண்டிகரிலும் கனமழை பெய்து வருகிறது.
மேலும் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் பஞ்சாப்பில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் வெள்ள பாதிப்புகள் காரணமாக மாநிலம் முழுவதும் ஆகஸ்ட் 26ம் தேதி சனிக்கிழமை வரை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!