இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!!

 
விடுமுறை

தமிழகத்தில் அரசு மற்றும் பொதுவிடுமுறைகள் தவிர்த்து உள்ளூர் விடுமுறைகள் அறிவிக்கப்படுவதும் வழக்கமான ஒன்று தான். உள்ளூர் பண்டிகைகள்,  திருவிழாக்கள், முக்கிய நிகழ்வுகளுக்காக இந்த விடுமுறை குறித்த அறிவிப்பை மாவட்ட கலெக்டர் வெளியிடுவார்.அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகி இம்மானுவேல் சேகரனின் 66 வது நினைவு தினம் இன்று செப்டம்பர் 11 ம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது.

இம்மானுவேல் சேகரன்

இதனை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இம்மானுவேல் சேகரன் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தவர். அத்துடன்   “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் கலந்துகொண்டு சிறை சென்றவர்.  தமிழகத்தில்   தென் மாவட்டங்களில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடி, ஓர் அரசியல் சக்தியாக, அவர்கள் அணி திரள்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்.  

இமானுவேல் சேகரன்


இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்தை ஒட்டி சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு  செப்டம்பர் 11ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்  உத்தரவு பிறப்பித்துள்ளார். விடுமுறை அளிக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு  அதனை ஈடு செய்யும் வகையில் செப்டம்பர்  23ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web