நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...!!

 
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!! கனமழை எதிரொலி!!

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் நேற்று முன் தினம் இரவு முதல் மிகமிக கனமழை பலத்த காற்றுடன்  பெய்தது. இதனால்  சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் கடல் போல் தேங்கியுள்ளது. சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது.

மழை

முக்கிய சாலைகளில் பெரும்பான்மையான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக மக்கள் நலன் கருதி மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது.  மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு  மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு   பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.

மிக்ஜாம் புயல்

தொடர்ந்து மழையினால் ஏற்பட்ட சேதங்களில் நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்றும்  நாளையும்  சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில்  அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web