ஈவ் டீசிங் கொடூரம்... ரயிலில் தள்ளி கை, கால்களை இழந்து கதறும் பள்ளி மாணவி!!
பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. உத்தரபிரதேச மாநிலம் பரேலி பகுதியில் வசித்து வருபவர் ஒரு பள்ளி மாணவி. அவர் வழக்கம் போல் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். மாணவியை தொடர்ந்து வந்த அதே கிராமத்தில் வசித்து வரும் 2 பேர், மாணவியை தண்டவாளத்தில் தள்ளிவிட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர். அந்த நேரத்தில் வந்த ரயில் ஏறியதில், 2 கால்கள் மற்றும் ஒரு கை துண்டிக்கப்பட்டது.
கால்களையும், கையையும் இழந்து மாணவி படுகாயம் அடைந்து அலறித் துடித்தார். அருகில் இருந்தவர்கள் மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இதுகுறித்த விசாரணையில், கடந்த சில நாட்களாகவே சிறுமிக்கு தொல்லை கொடுத்து வந்த இளைஞர்கள், பின்தொடர்ந்து வந்து தண்டவாளத்தில் தள்ளிவிட்டு விட்டு தப்பியோடி ஓடிவிட்டனர் என்கிறது முதல்கட்ட தகவல்கள்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...