காலாண்டு விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் கூடாது!
Sep 27, 2025, 11:30 IST
தமிழகம் முழுவதும் மாநில வழி கல்வித் திட்டத்தில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 15ம் தேதி முதல் காலாண்டு தேர்வுகள் நடந்து வருகின்றன.

அதேபோல பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வுகள் 10ம் தேதி தொடங்கியுள்ளன. இந்த தேர்வுகள் இன்றுடன் முடிவடைகின்றன.

இதனையடுத்து காலாண்டுத் தேர்வு விடுமுறையை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில், காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது எனவும், அப்படி நடத்தினால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
