நாளை தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை... இந்த 3 மாவட்டங்களில் அரசு ஊழியர்களுக்கும் விடுமுறை அறிவிப்பு!

 
பள்ளி கல்லூரி விடுமுறை school holiday

ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு நாளை ஆகஸ்ட் 3ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதோடு தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால், இந்த மூன்று மாவட்டங்களிலும் அரசு ஊழியர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் பள்ளிகள் தாமதமாக துவங்கிய நிலையில், சனிக்கிழமைகளில் பள்ளிகள் பணி நாளாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நாளை ஆடி 18ம் பெருக்கு விழாவை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதைப் போல நாளை சில மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் நாளை ஆகஸ்ட் 3ம் தேதி தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவித்து சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார். இதனை ஈடுசெய்யும் வகையில் பிறிதொரு நாள் பணிநாளாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை சேலம் மாவட்டத்தில் அரசு ஊழியர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் முக்கிய அரசு அலுவலகங்கள், அரசு கருவூலங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தீரன் சின்னமலை

ஈரோடு மாவட்டம் காங்கேயம் பகுதியில் 1756ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி பிறந்த தீரன் சின்னமலை, இளமையிலேயே இளைஞர் படைகளை உருவாக்கி, பல்வேறு வித்தைப் பயிற்சிகளைக் கற்றுத் தந்து தீரத்துடன் விளங்கினார். வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், மருது சகோதரர்கள், திப்பு சுல்தான் ஆகியோரோடு சேர்ந்து வெள்ளையர்களை எதிர்த்து நாட்டின் சுதந்திரத்திற்காக போரிட்டு பல்வேறு போர்களில் வெற்றிவாகை சூடியவர். கிழக்கிந்திய கம்பெனி படையினர் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க பல்வேறு கட்டங்களாக போர் புரிந்து வந்த இவர், சூழ்ச்சி மூலம் கைது செய்யப்பட்டு, சங்ககிரி கோட்டையில் 1805-ம் ஆண்டு ஆடிப்பெருக்கு அன்று தூக்கிலிடப்பட்டார். அவரை பெருமைப்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆடிப்பெருக்கு தினத்தன்று நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.  இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்திலும் உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஆடிப்பெருக்கு

அதே போன்று நாமக்கல் மாவட்டத்திற்கும் நாளை ஆகஸ்ட் 3 ம் தேதி உள்ளூர் விடு முறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை கொல்லிமலையில் நடைபெற உள்ள வல்வில் ஓரி விழாவினை முன்னிட்டு, உள்ளூர் மக்களும் விழாவில் கலந்து கொள்ள வசதியாக உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web