விஜய் இதயத்தில் வலி இல்லை... சீமான் பேட்டி!

 
சீமான்
 

கரூர் சம்பவத்தில் வீடியோ வெளியிட்டிருந்த விஜய், “சி.எம். சார்” என கூறியது சிறுபிள்ளைத்தனம் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறியுள்ளார்.

சீமான் விஜய்

விருதுநகரில் காமராஜர் நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் சீமான் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், “விஜய் பேசியது திரைப்பட வசனம் போல இருக்கிறது. இது நல்ல அணுகுமுறை அல்ல. விஜய் வீடியோவை பார்க்கும் போது அவரது இதயத்தில் வலியோ, காயமோ இல்லை. உருக்கமாக பேசி விஜய் வீடியோ வெளியிட்டிருக்க வேண்டும்.

சீமான்

திரைக்கவர்ச்சி நாட்டை ஆள முயற்சிக்கிறது. திரை மயக்கம், திரை போதையில் உள்ளனர். விஜய்க்கு சுய சிந்தனை இருக்கிறது என்றால் எதற்கு அருகில் ஆள் இருக்க வேண்டும்? சி.எம். சார் என விஜய் கூறியது சிறுபிள்ளைத்தனம். இனிமேல் இது போன்று நடக்காது என்று எந்த கட்சியும் தெரிவிக்கவில்லை” என்றார்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?