வீடியோ... மைதானம், தேதி இடம் எல்லாமே ரெடி.. சீமானை சீண்டும் வீரலட்சுமி!!
நடிகை விஜயலட்சுமி சீமான் விவகாரம் ஒருபக்கம் இன்னமும் இழுபறியில் இருக்க மற்றொரு பக்கம் வீரலட்சுமி ஆவேசமாக கிளம்பியுள்ளார். சீமானை தமிழர் முன்னேற்றப்படையின் தலைவர் வீரலட்சுமியின் கணவர் பூவை.கணேசன் தொடர்பு கொண்டு பேசினார். இது குறித்த ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. அந்த ஆடியோவில், '’அண்ணே நம்ம ரெண்டு பேரும் பாக்சிங் பண்ணலாமா? டவர் ஏறி? ரிங் ஏறி.. ரிங் ஏறி.. உங்க கூட பாக்சிங் பண்ணனும்னு ஆசையா இருக்குண்ணே’’ என கூறியதும் அந்த இணைப்பை சீமான் துண்டித்து விடுகிறார்.
பாக்ஸிங் செய்ய இடம் ரெடி... சீமானை அழைக்கும் வீரலட்சுமி..!#Seeman #NaamTamizhar #Veeralakshmi #Kamadenutamil pic.twitter.com/M1pACBTFei
— Kamadenu (@KamadenuTamil) September 23, 2023
இது குறித்து சென்னையில் சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் சீமான், ‘’அவர் எங்க கையாலதான் சாகனும்னு முடிவெடுத்துட்டார் அப்படின்னா சந்தோஷமாக எதிர்கொள்கிறேன்.. கேட்டுச் சொல்லுங்க.. இடம், நேரம் எல்லாம் நீங்க சொல்வீங்களாம்.. எப்ப வேணும்னாலும் அவரு வருவாருன்னு சொல்லிடுங்க'’ என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பாக்ஸிங் நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வீரலட்சுமி பரபரப்பு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ‘’பெண் தலைவர் என்றும் பாராமல் என்னை இழிவுடுத்தியதை பொதுவாழ்வில் இருப்பதால் நான் பொறுத்து போகலாம்.
ஆனால், என்னுடைய கணவர் பொறுத்துக் கொள்ள மாட்டார். அவர் உங்களை தொடர்பு கொண்டு பேசிய அழைப்பை துண்டித்து விட்டீர்கள். போனில் பேசமால், ஊடகங்கள் முன்னால் மட்டுமே வீரத்தை காட்டுகிறீர்கள்.திருவள்ளூர் மாவட்டம், தொட்டிக்கலை பஞ்சாயத்து மைதானத்தில் வரும் காணும் பொங்கல் அன்று பாக்ஸிங் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். பந்தயம் என்ன என்பதை போட்டி நடைபெறும் 3 நாட்களுக்கு முன்பு நாட்டு மக்களுக்கு அறிவிப்பேன்’’ என குறிப்பிட்டுள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...