திமுகவுக்கு எதிராக 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி.. ஆசிரியர் சங்கங்கள் அதிரடி!!

 
ஆசிரியர் சங்கங்கள்

தமிழகம் முழுவதும் இடைநிலை பகுதி நேர ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல ஆசிரியர்கள்  மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் ஆசிரியர் சங்கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. அடுத்த நாள் அதிகாலை ஆசிரியர்கள் அனைவரும் அதிரடியாககைது செய்யப்பட்டனர். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டதாக அறிவித்தனர்.  

ஆசிரியர் சங்கங்கள்

தமிழகத்தில் சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பள்ளிகளின் பகுதி நேர ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் சென்னையில் ஒரு வார காலத்திற்கும் மேலாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு சார்பில் இவர்களுடன் 3 கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்ன. இருந்தபோதும் சுமூகமான   முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைய 3 பேர் அடங்கிய குழு அமைக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார்.   இந்த பரிசீலனைகளை அமல்படுத்த கால அவகாசம் தேவை என்பதால் ஆசிரியர்கள் உடனடியாக போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். ஆனால் தொடர்ந்து ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்தி வந்த நிலையில்,  அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.  

ஸ்டாலின்

பல அரசியல் தலைவர்கள் இந்த கைதுக்கு கண்டனம் தெரிவித்தனர்.   நாடாளுமன்ற தேர்தலில் திமுக நிற்கும் 40 தொகுதிகளிலும் ஆசிரியர்களை நிறுத்தப் போவதாக ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ”கடந்த 7 நாட்களாக அறவழியில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.   பல வழிகளில் எங்கள் போராட்டத்தை நீர்த்துப் போக செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நடைபெற்ற பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளது.ரூ 10000 சம்பளத்தில் அரசு பணியில் அமர்த்த வலியுறுத்தப்பட்டது. தமிழகத்தில்  நிதி மட்டும் தான் பற்றாக்குறையா? நீதியும் பற்றாக்குறையாக உள்ளதா? அறவழியில் போராடிய எங்களை கைது செய்து அரசு அடாவடி செய்துள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.  2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக நிற்கும் 40 தொகுதிகளிலும் அவர்களுக்கு எதிராக ஆசிரியர்களை நிறுத்தப் போகிறோம்” என தெரிவித்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web