கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி கணவனை வெட்டிக் கொலை!! மனைவி பரபரப்பு வாக்குமூலம்!!

 
அழகுச்சின்னு

தேனி மாவட்டம் பாலக்கோம்பை, ராயவேலூர் பகுதியில் வசித்து வருபவர்  சண்முகவேல்.இவருக்கு வயது  37. இவரது மனைவி அழகுசின்னு.இவருக்கு வயது 31.  கூலித் தொழிலாளிகளான இவர்களுக்கு 2   குழந்தைகள்.  வேலைக்கு  போகாமல் போனாலும் வீட்டில் பணத்தையும் தராமல் தினமும் குடித்து வரும் பழக்கம் உடையவர் சண்முக வேல் இதனால் கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது. வழக்கம் போல் இரவு கணவன் குடித்து விட்டு வந்து தகராறு செய்தான்.   ஆத்திரமடைந்த அழகுசின்னு வீட்டில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து சண்முகவேல் முகத்தில் தூவிவிட்டார்.

மிளகாய்ப்பொடி

இதனால் சண்முக வேல்   எரிச்சல் தாங்க முடியாமல் அவர் அலறி துடித்தார். இன்னமும்  ஆத்திரம் அடங்காத அழகுசின்னு அரிவாளை எடுத்து சண்முகவேலின் இடது கை, கால் மற்றும் பின் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டார்.   சம்பவ இடத்திலேயே சண்முகவேல் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.  இதுகுறித்து தகவல் அறிந்த ராஜதானி போலீஸார் அங்கு சென்று சண்முகவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மனைவி அழகுசின்னுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

போலீஸ்


அழகு சின்னுவும், அவரது  கணவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்தனர்.   கடந்த 2 மாதங்களுக்கு முன் உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும் சேர்த்து வைத்தனர்.  அதன்பிறகும் சண்முகவேல்  திருந்தவில்லை.    வழக்கம் போல் குடித்து விட்டு வந்து தகராறு செய்ததால் அவர் மீது மிளகாய் பொடியைத் தூவி அரிவாளால் வெட்டிக்கொலை செய்ததாக அழகு சின்னு போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். மதுபோதையில் தகராறு செய்த கணவனை, மனைவி அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web