காஷ்மீரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு... 8 பேர் பலியான சோகம்!

 
தீவிரவாதிகள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகள், ஓடும் பேருந்து மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பரிதாபமாக 8 பேர் உயிரிழந்தனர்; 26 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஜில்ஜித் பல்டிஸ்டான் பகுதியில் சுமார் 50க்கும் மேற்படோருடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பாகிஸ்தானின் பெஷாவர் மற்றும் சிலாஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் இந்த பேருந்தில் பயணித்தனர். நேற்று இரவு சில்லாஸ் பகுதி அருகே பேருந்து வந்து கொண்டிருந்த போது, தீவிரவாதிகள் திடீரென பேருந்து மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

தீவிரவாதிகள் சுட்டு கொலை

இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, எதிரில் வந்த லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த துப்பாக்கிச் சூடு மற்றும் விபத்தில் சிக்கி 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் இருவர் இந்திய ராணுவத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் 26 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டதில், அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பேருந்து, விபத்தில் சிக்கியதை தொடர்ந்து அங்கிருந்து தீவிரவாதிகள் தப்பி ஓடி உள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்தில் இருந்த 8 பேர் பலி

இந்த சம்பவம் தொடர்பாக தற்போது போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தீவிரவாதிகளை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை இந்த சம்பவத்திற்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. கடந்த 2013 ஆம் ஆண்டு, இப்பகுதியில் மலை ஏற்றத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 9 வெளிநாட்டவர் படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

From around the web