அதிர்ச்சி... காதலியின் கையை துண்டாக வெட்டிய காதலன்... வேறொருவருடன் நிச்சயதார்த்தம் நடந்ததால் வெறிச்செயல்!
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் தன்னுடைய காதலியை அவரது பெற்றோர், வேறொரு ஆணுடன் திருமணம் செய்து வைத்ததைத் தெரிந்து கொண்ட காதலன், தனது காதலியின் கையை துண்டாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து போலீசாரின் விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட ரிங்கு எனும் 20 வயதுடைய இளைஞனை, கிராமத்தில் ஒதுக்குப்புறமான இடத்தில் சந்திக்கச் இளம்பெண் சென்றுள்ளார். காதலர்கள் இருவரும் சந்தித்து பேசிக் கொண்டிருந்த போது, இளம்பெண்ணுக்கும் ரிங்குவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஆத்திரத்தில் காதலியின் இடது கையை ரிங்கு துண்டாக வெட்டியதாக தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ரிங்குவை போலீசார் கைது செய்து சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர், பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவரது உடல்நிலை சீராகிவிட்டதாக அதிகாரி அரவிந்த் குமார் தெரிவித்தார். இந்த சம்பவம் நடந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு ரிங்கு கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரிங்குவும் பாதிக்கப்பட்ட பெண்ணும் காதலித்து வந்துள்ள நிலையில், பெண்ணின் குடும்பத்தினர் வேறொரு நபருடன் திருமணத்தை நிச்சயித்துள்ளனர். இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இளம்பெண் சம்மதித்ததால் காதலன் கோபமடைந்து, இளம்பெண்ணை கிராமத்தின் ஒதுக்குப்புறமான தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு அழைத்துள்ளார். பின்னர், திருமண நிச்சயதார்த்தம் குறித்து அவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் எழுந்துள்ளது. அப்போது, ரிங்கு அவளை விவசாய மண்வெட்டியால் வெட்டி இடதுபுற கையைத் துண்டாக்கி உள்ளார். பாதிக்கப்பட்ட பெண் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!