அதிர்ச்சி.. சிறையில் பெண் கைதி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

கடந்த 2014-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் 7 வயது சிறுவனை கடத்திச் சென்று கொன்ற வழக்கில் அங்கூர் பாடியா என்ற 43 வயது பெண் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2018 இல் கோட்டா மாவட்ட நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. அதைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பான மேல்முறையீட்டில், 2021 இல் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் அங்கூர் பாடியாவின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
பின்னர் அவர் பைகானேர் சிறையில் அடைக்கப்பட்டார், பின்னர் அவர் சங்கானேர் திறந்தவெளி சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் நேற்று மாலை சங்கனேர் சிறையில் அங்கூர் பாடியா துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி வேமந்த் சிங் தெரிவித்தார்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா