சென்னையில் அதிர்ச்சி... போதைப்பொருள் கடத்திய டான்ஸ் மாஸ்டர்!

 
போதைப்பொருள்

தமிழகத்தில் சமீப காலங்களாக போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருகிறது. நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்னை ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த சிபிராஜ் (22) என்ற டான்ஸ் மாஸ்டர் போதைப்பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

நடன கலைஞரான சிபிராஜ், சென்னை ஈக்காட்டுதாங்கல் பகுதியில் தனியே டான்ஸ் பயிற்சி வகுப்புகள் நடத்தி வந்துள்ளார். சமூக வலைதளங்களில் தன் நடன வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவராக இருந்த அவர், இன்ஸ்டாகிராமில் ஏராளமான பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்தார்.

போலீஸ்

இந்நிலையில் திருவள்ளூர் அருகே மணவாளநகர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அந்த வழியே பைக்கில் வந்த சிபிராஜை நிறுத்தி போலீசார் விசாரணை செய்தனர். அவரிடம் இருந்து 55 கிராம் மெத்தபெட்டமின் போதைப்பொருள், 4 லைட்டர்கள், விலை உயர்ந்த 2 செல்போன்கள் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டன.

போதைப்பொருளை திருவள்ளூரில் விற்பனை செய்ய வந்திருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீசார், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

பள்ளி மாணவி தற்கொலை!! கல்லூரி மாணவர் கைது.!!

திருவள்ளூர் பகுதியில் போதைப்பொருள் பரவல் அதிகரித்துள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். இளைஞர்கள் போதை பழக்கத்தில் சிக்கி வருவதாகவும், இதை கட்டுப்படுத்த போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!