நீதிமன்றத்தில் அதிர்ச்சி.. காவலரை ஆபாசமாக பேசிய வழக்கறிஞர்!

 
 வழக்கறிஞர் சுரேஷ்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பலராமன் மனைவி மஞ்சு,  பலராமன் உயிர் இழந்த நிலையில் மஞ்சு சொந்தமாக ஷிப்ட்டிசையர்  கார் வாங்கி உள்ளார். இந்த நிலையில் இதனை சில மாதங்களுக்கு முன்பு தில்லைநகர் பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன் மற்றும் சாய்பாபா நகர் பகுதியை சேர்ந்த பைரோஸ் கான் ஆகியோர்  ஒரு லட்ச ரூபாய்க்கு காரை அடமானம் வைத்துள்ளார் இதனை இருவரும் கூட்டு சேர்ந்து மாற்று நபருக்கு மூன்று லட்ச ரூபாய்க்கு போலியாக டாக்மெண்ட் செய்து விற்பனை செய்து விடுவதாக தெரிகிறது. 

இது குறித்து மஞ்சு அடமானம் வைத்த நபர்களிடம் கேட்கும் பொழுது உனது காரை தர முடியாது என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.இதன் காரணமாக கடந்த திங்கட்கிழமை அன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் தனது காரை இவர்களிடமிருந்து மீட்டு தர கோரி,   மஞ்சு மாத்திரை சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.

இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.  இந்த நிலையில் இன்று காலை கமலக்கண்ணன் மற்றும் பைரோஸ் கான் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அப்போது இருவருக்கும் ஆதரவாக ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ் என்பவர் அந்த கைதான இருவரிடமும் நீதிபதி கேட்கும் போது எனக்கு உடல்நிலை சரியில்லை என கூறுங்கள் என கூறியுள்ளார். 

இதன் காரணமாக பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் குடியரசன், ஏன் இது போல் சொல்லிக் கொடுக்குறீங்க இது தவறு என்று கூறியுள்ளார் இதனால் ஆத்திரமடைந்த வழக்கறிஞர் சுரேஷ் காவலர் குடியரசனை அநாகரிகமாகவும் ஆபாசமாகவும் கொலை மிரட்டலும்‌ விடுத்துள்ளார். இதன் காரணமாக அதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நீதிமன்றத்திலேயே காவலரை ஆபாசமாக பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!