அதிர்ச்சி... வட்டி கட்டல... கழிப்பறை கழுவச்சொல்லி கொடுமை... தம்பதியர் தற்கொலை முயற்சி!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கத்தப்பட்டி பகுதியில் இனிப்பகம் நடத்தி வந்தவர்கள் ராஜா - மலைச்செல்வி தம்பதி. இவர்களுக்கு 2 மகள்கள். இவர்கள் தொழிலை மேம்படுத்த அப்பகுதியைச் சார்ந்த ஒரு சிலரிடம் கந்து வட்டியில் கடன் வாங்கி தொழிலில் முதலீடு செய்தனர். ஆனால், தொழில் தொடர்ச்சியாக நஷ்டம் அடைந்த காரணத்தினால் வட்டித் தொகையை முறையாக செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
கடன் கொடுத்தவர்கள், தம்பதிக்கு மிரட்டல் விடுத்தனர். அத்துடன் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி பேசியதாகவும் தெரிகிறது.

இவை அனைத்தையும் தாண்டி ராஜாவின் மனைவி மலைச்செல்வியை வீட்டிற்கு வந்து கழிவறை கழுவச் சொல்வது, பாத்திரம் கழுவ வைப்பது, வீட்டை கூட்டுவது என பல வீட்டு வேலைகளை செய்ய வற்புறுத்தி உள்ளனர். தொடர்ந்து 2 நாட்கள் வீட்டு வேலையை செய்த மலைச்செல்வி, வாங்கிய கடனுக்குண்டான வட்டி தொகையை கட்டிவிட்டார். அதன்பிறகும் வீட்டு வேலைக்கு ஏன் வரவில்லை என வீட்டிற்கு வந்து தன் மகள் முன்பே தகாத வார்த்தைகள் திட்டி உள்ளனர்.
இதனால் மனமுடைத்த தம்பதியினர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் ராஜா பரிதாபமாக உயிரிழந்தார். மலைச்ச்செல்வி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருவரும் தற்கொலை செய்ய நினைத்தபோது எழுதிய உருக்கமான கடிதம் ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத் மற்றும் சிவா ஆகிய இருவரை கந்துவட்டி கொடுமையின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த விவகாரம் குறித்து மேலூர் கோட்ட துணை கண்காணிப்பாளர் வேல்முருகனை தொடர்பு கொண்டு கேட்டபோது, கந்து வட்டிக் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முதல் கட்டமாக 2 நபர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். மேலும் இது குறித்து முறையாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
